திருவண்ணாமலை, ஆக.18- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருவண்ணா மலை 8 ஆவது மாவட்ட பொதுக்குழு வந்தவாசியில் நடை பெற்றது. என்.வெங்க டேசன் தலைமை தாங்கினார். ஆர்.ராம கிருஷ்ணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் தங்க அன்பழகன் துவக்கி வைத்து பேசினார். கே.நீதிமாணிக்கம் செயலாளர் அறிக்கையை வாசித்தார். எ.நடரஜன் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில துணைப் பொது செயலாளர் எம்.பால சுப்பிரமணி சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டச் செயலாளர் கி.பால்ராஜ், அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் நா.ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு மாவட்டத் தலைவர் ஆ. பெருமாள், அமைப்பு நிர்வாகி எஸ்.ஆனந்தன், புலவர் கோவிந்தசாமி, சிபிஎம் வட்டச் செயலாளர் ஜா.வே.சிவராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், மின்துறை பொதுத்துறையாக தொடர்ந்து செயல்பட வேண்டும், மின்வாரிய வைரவிழா சலுகையாக 3 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் என். வெங்க டேசன், செயலாளர் கே.நீதி மாணிக்கம், பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வடிவேலு நன்றி கூறினார்.